rtjy 68 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் போலியான மருந்து விற்பனை

Share

இலங்கையில் போலியான மருந்து விற்பனை

சுகாதார அமைச்சுக்கு போலியான மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை விற்றதாகக் கூறப்படும், இலங்கை நிறுவனமான Isolez Biotech Pharma AG (Pvt) Ltd. உத்தியோகபூர்வ வழிகள் மூலம், மனித இரத்த பிளாஸ்மாவை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மருந்துகளையோ அல்லது மூலப்பொருளையோ இறக்குமதி செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேவகே சுதத் ஜானக பெர்னாண்டோ இந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சர்ச்சைக்குரிய கேள்விப்பத்திரத்துக்கு முத்திரையிட்டு பணத்தை; செலுத்திய சுகாதார அமைச்சு அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

7,500 மனித இம்யூனோகுளோபுலின் பொதிகளுக்கான முதல் மேற்கோளை ஐசோலெஸ் 12 மாதங்களுக்கு முன்பு, அக்டோபர் 2022 இல் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ விநியோகப் பிரிவில் (MSD) சமர்ப்பித்தது.

இதற்கான செலவு 975,000 டொலர்கள் அதாவது 316 மில்லியன் ரூபாய்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த குப்பிகள் ஜூலை மாதம் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இதற்கிடையில் மனித இம்யூனோகுளோபுலினுக்கான ‘மூலப்பொருட்களை’ இறக்குமதி செய்ய குறித்த நிறுவனம் திட்டமிட்டிருந்ததை சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் மேற்கோள்கள் காட்டியுள்ளன.

எனினும் 2022 மற்றும் 2023க்கான சுங்கத் தரவுகள், உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் இலங்கைக்கு இரத்த பிளாஸ்மாவை இறக்குமதி செய்த நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இம்யூனோகுளோபுலின், சில நோயாளிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்திய பின்னரே மருந்து பற்றிய சந்தேகங்கள் எழுந்தன. இதேவேளை இந்த குப்பிகளின் உள்ளடக்கம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....