SUTHARCHINI
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு நீக்கம்! – சுதர்ஷினி

Share

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த 4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தொற்று வீதம் சற்று குறைவடைந்து வருகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் 21 க்கு பின்னர் நாட்டை கட்டங்கட்டமாக திறக்க சாத்தியம் உள்ளது.

நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதுடன் இதர சுகாதார விடயங்களையும் முறையாக பின்பற்றினாலே தொற்று குறைவதற்கான சாத்தியம் உண்டு.

அதேவேளை நாட்டில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். தொற்றாளர் தொகை குறைவடைந்து வந்தாலும் நாடு இன்னமும் அபாய வலயத்தில் இருந்து மீளவில்லை எனவும் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...