SUTHARCHINI
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு நீக்கம்! – சுதர்ஷினி

Share

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த 4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தொற்று வீதம் சற்று குறைவடைந்து வருகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் 21 க்கு பின்னர் நாட்டை கட்டங்கட்டமாக திறக்க சாத்தியம் உள்ளது.

நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதுடன் இதர சுகாதார விடயங்களையும் முறையாக பின்பற்றினாலே தொற்று குறைவதற்கான சாத்தியம் உண்டு.

அதேவேளை நாட்டில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். தொற்றாளர் தொகை குறைவடைந்து வந்தாலும் நாடு இன்னமும் அபாய வலயத்தில் இருந்து மீளவில்லை எனவும் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...