shan 01 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை!

Share

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்குப் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தனக்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் எம்.பி. தெரிவிக்கையில்,

“14 நாட்களுக்கு வீதியை மறித்தோ பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

இதுதான் நாட்டின் இன்றைய அராஜகமான நிலை. ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும்போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றிருக்கின்றார்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா? என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.

களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார்.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. அவ்வாறிருக்கையில், களவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களைக் கட்டுப்படுத்த அரசு முனையும்போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாகப் போராட முனைவார்கள்.

நான் இன்று வரை போராட்டங்களைச் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், இந்தத் தடை உத்தரவு கிடைத்ததற்குப் பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....