ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு

Share

ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் (16.07.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று (18.07.2023) இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகக் கட்சியின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்றைய தின கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...