நாட்டை வந்தடைந்தது சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்

1660618541 1660467239 1660406125 china L

சீனாவின் உளவுக் கப்பலான வான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கப்பலின் வரவில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பல், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

குறித்த கப்பல் வருகையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என தெரிவித்து இந்தியா எதிர்ப்பாக்களை வெளியிட்டிருந்தது. இருப்பினும் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு நீண்ட இழுபறியின் பின்னர் அனுமதி வழங்கியது.

#SriLankaNews

Exit mobile version