zePBjZACouwfRR7I6vibtlity9Bo4v4J
இலங்கைசெய்திகள்

தொடர் மின்வெட்டு – கோரிக்கை நிராகரிப்பு

Share

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்தர காலத்தில் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

A/L பரீட்சை காலத்தில் இரவு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...