24 3
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹிருணிகா

Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்றையதினம் (04.12.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தினை மீளப் பெறுவதாகவும், இனிமேல் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...