24 665fa05b64128
இலங்கைசெய்திகள்

நாட்டில் 15 பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கம்

Share

நாட்டில் 15 பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கம்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புக்கள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கட்டளையின் பிரகாரம் இந்த நாட்டில் 15 பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 210 பேரின் நிதி, ஏனைய நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (TRO), தேசிய தவ்தீஹ் ஜமாத் (NTJ), ஜமாதே மிலாதே இப்ராஹிம் (JMI) போன்ற 15 அமைப்புகளின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 113 பேரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 11
செய்திகள்இந்தியா

20 இலட்சம் புத்தகங்களின் சேகரிப்பாளர்: பத்மஸ்ரீ அன்கே கவுடாவின் அரிய சாதனை!

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா (Anke...

26 698472524cf78
செய்திகள்உலகம்

பிரான்ஸில் சீன உளவாளிகள் கைது: Airbnb வீட்டின் தோட்டத்தில் செயற்கைக்கோள் கருவி மூலம் ரகசியத் தகவல் சேகரிப்பு!

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள்...

trump wh af1 feb 6 1770433049681 hpMain
செய்திகள்உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் அமெரிக்காவில் கூடுதல் வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

ஈரானிய அரசாங்கத்தின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட...

26019077 tn13
செய்திகள்இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு பலம்: 3,000 கி.மீ தூரம் பாயும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில், தரை விட்டு தரை பாயும் அக்னி-3...