tamilni 415 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஆபத்தான பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவரின் நிலை

Share

கொழும்பில் ஆபத்தான பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவரின் நிலை

மெனிங்கோகோல் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிப்பவர் என்பதனால் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அவருக்கு நெருக்கமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

மூளைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் நினைத்த வகையில் போடப்படுவதில்லை, எனவே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

மெனிங்கோகோல் பாக்டீரியம் மூளை திசுக்களைத் தாக்கி மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதிப் பணிப்பாளர் நாயகம், மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்டறியப்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் குணமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவ்வாறான சிறுவர்கள் பொதுவாக அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டால் அவர்கள் குணமடைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...