12 13
இலங்கைசெய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி

Share

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி

நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளைப் பரிசோதித்து நட்டஈடு வழங்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை (agricultural and agrarian insurance board) தெரிவித்துள்ளது.

அத்துடன் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,239 விவசாயிகளுக்காக 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்குக் கிடைக்கப் பெற்ற பரிந்துரை பாதிப்பு விண்ணப்பங்களுக்கு அமைவான நிதி அவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக 3,272 விவசாயிகளுக்காக 70 மில்லியன் ரூபா அவர்களது கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளுக்கமைய 8,705 விவசாயிகளுக்காக 122 மில்லியன் ரூபா நேற்றைய தினம் (10) விவசாயிகளின் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இது தவிர, நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நெல், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டஈட்டை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...