gover
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய குழு

Share

ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

60 வயது பூர்த்தியாகும் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் 25 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களை மாத்திரமே அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க விரும்பும் ஊழியர்களின் பட்டியலையும், ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக தேவைப்படும் ஆட்சேர்ப்புகளின் எண்ணிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களிடம் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

அதற்கிணங்க, அரச திணைக்களங்கள் மற்றும் துறைகளில் அத்தியாவசியமான பதிலீட்டு தேவைகளை மட்டுமே தெரிவிக்குமாறு செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு மொத்தமாக ஒரு டிரில்லியன் ரூபாய்களை அரசாங்கம் செலவழிப்பதால் அந்த ஒதுக்கீட்டில் இருந்தே பதில் ஆட்சேர்ப்புகளுக்கும் செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...