IMG 8831
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பருத்தித்துறை முனையில்

Share

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்கரையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம்பெற்றது.

பிற்பகல் 4:00 மணிக்கு உயிர்நீத்தோருக்காக இரு நிமிட அக வணக்கத்துடன் இடம் பெற்ற நிகழ்வில் பொது ஈகை சுடரினை முன்னாள் போராளி ஜெயராச் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து சுடர்களை பருத்தித்துறை நகர சபை தலைவர் யோ.இருதயராசா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான சி.தியாகலிங்கம், சி.பிரசாத், காந்தன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் ப.நிலாங்கதன், பருத்தித்துறை மூலக்கிளை உறுப்பினர் திரு.சாமியப்பா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் திரு.நவரத்தினம், மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதேவேளை குறித்த பகுதியில், பருத்தித்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 8777 IMG 8784 IMG 8788 IMG 8818 IMG 8819 IMG 8821

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...