ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

Share

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தை 2048ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொய் கனவு காண வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (02.07.2023) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்கள் தமது உடைமைகளை இழக்கின்றனர். இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

நாட்டின் பொருளாதார சிக்கலினால் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி பல்வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

இப்போது ஏனைய பகுதிகளையும் விற்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் அரசாங்கம் எதைப் பற்றி கனவு காண்கிறது? இதன் இலக்கு என்ன?

முத்துராஜவலை முழுவதையும் அழித்து, வெளியாட்களுக்கு விற்று, பணம் சம்பாதித்து, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாக வாழுகின்றார்கள்.

ஆனால், நாட்டு மக்களுக்கு எஞ்சியிருப்பது துன்பம் மட்டுமே. இதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது என பேராயர் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...