நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

Share

நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய பாத்திமா ஃபஸ்னா என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி உட்பட 7 பேர் நேற்று மதியம் அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்கு சென்றிருந்த நிலையில், யுவதி செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி தவறி விழுந்த உடன் தனக்கு நீச்சல் தெரியாது எனக்கூறி உதவிக்கோரியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்திருந்த போதும் முயற்சி பயனளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யுவதியை தேடும் பணியை தொடர கடற்படையின் நீர்மூழ்கிக்குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...