WhatsApp Image 2022 06 29 at 8.11.09 AM
இந்தியாஇலங்கைசெய்திகள்

டில்லியிடம் தொடர்ந்து உதவி கோருகிறது கொழும்பு!

Share

இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் புதுடில்லியில் அவசர பேச்சுகளை மேற்கொண்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம் இரண்டு வாரங்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பெட்ரோலிய பொருள்கள் வழங்கல் மற்றும் விநியோகிப்பது தொடர்பில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இந்தச் சந்திப்பில் இலங்கைதூதுவர் எடுத்துரைத்துள்ளார் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மக்கள்எதிர்கொண்டுள்ள பெரும் நெருக்கடிகள் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.

கடனுதவி மூலம் எரிபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா வழங்கிய உதவிக்காக நன்றி தெரிவித்துள்ள
மிலிந்த மொராகொட தற்போது இலங்கைக்கு தேவையாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை அவசர அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இந்திய அமைச்சருடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளார் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள உடனடி நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்குஇந்தியாவும் இலங்கையும் எந்த வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதுகுறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

இந்தசந்திப்பின்போது பெட்ரோலிய எண்ணெய், எரிவாயு துறைகளில் இரு நாடுகளும் எவ்வாறு நீண்டகால உறவுகளைப் பேணலாம் என்பது குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இந்தியாவின் தற்போதைய வெளி விவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் போல அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் முன்னர் கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் முதல் நிலை செயலாளர் பதவியில் பணியாற்றியிருந்தார் என்பதும் – இவரே 1987 ஜூலையில் ஹலிக்கொப்டரில் யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் கோவிலை அண்டிய வெளியில் போய்இறங்கி, அங்கிருந்து தலைவர் பிரபாகரனை பிரதமர் ராஜிவ் காந்தியுடனான பேச்சுக்கு இந்தியாவுக்கு அழைத்துச் சென்றார் என்பதும் – குறிப்பிடத்தக்கவை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...