கோட்டாபய 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்வாக பொறிமுறையை பேண ஒத்துழையுங்கள்! – ஜனாதிபதி கோரிக்கை

Share

” ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்து, நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் உரையில் முக்கிய அம்சங்கள் வருமாறு,

  • இவ்வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள அதேபோல மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய ஒருவரை பிரதமராக்கி, புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அதன்பின்னர் நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் ’19’ ஐ மீள அமுலாக்கும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
  • ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். புதிய அரசு, நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அந்த கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்தி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அரச நிர்வாக பொறிமுறையை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்.#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...