28
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை

Share

ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை

இனப்பிரச்சினையை தீர்க்க கிளீன் சிறீலங்கா போன்ற கிளீன் சிந்தனையைக் கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi) நேற்றைய தினம் (01.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “நாட்டுக்கு வருகின்ற நிதிப்பாய்ச்சலை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டில் வேரூன்றிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

இலங்கையின் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை.

இலங்கை அரசாங்கம் கிளீன் சிறீலங்கா போன்று புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கும் கிளீன் சிந்தனை திட்டத்தைக் கொண்டு வருமாக இருந்தால் உலகத்திலுள்ள தமிழர்களின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கில் புதிய அபிவிருத்தியை உருவாக்கத் தயார்.

ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்சாலைகள் இன்னும் இயங்க முடியாதுள்ளது.

இவற்றிலிருந்து வெளியே வரவேண்டும். காவல்துறை, காணி அதிகாரங்களைத் தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...