thumb large Roshan ranasinghe
இலங்கைசெய்திகள்

‘Clean and Green city SriLanka’ நாளை ஆரம்பம்

Share
பசுமையான இலங்கை (Clean and Green city Srilanka ) எனும் தொணிப்பொருளில் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில் இளம் சந்ததியினரின் பங்களிப்பு, தலையீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இளைஞர் விவகாரம்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன  இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையின் சகல பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும்  ஒவ்வொரு நகரங்களை தெரிவுசெய்து இந்தத் திட்டத்தை  செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிரமாதான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு   இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவர்களின் தலைமையில்  நாளை (03) காலை திகதி 9 மணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதான காரியாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மஹரகம நகரின் 5 இடங்களில் நகர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...