image afe366f960
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மோதல்! – இருவர் பலி

Share

மினுவாங்கொடை பொல்வத்தை, பகுதியில் இன்று (18) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊரகஹ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றமை மற்றும் யக்கலமுல்ல பகுதியில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி நான்கு வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் வாகனத்தை செலுத்திய நபரையும் கைது செய்ய சென்ற போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரும், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலொன்றின் தலைவரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ஊரகஹ இந்திக்கவின் பிரதான உதவியாட்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் போத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து ரீ-56 ரக துப்பாக்கியொன்றும், போர 12 துப்பாக்கியொன்றும், ரம்போ ரக கத்தி ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொடை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...