அரச ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்தை, அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளது. இதுவொரு பொருத்தற்ற தீர்மானம் இதனை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தற்போதைய அரசாங்கம் கைது செய்து வருவதுபோல அரச ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கிறது.
அரச ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்தை, அரசாங்கம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment