298821600 6336370659723810 2588451440648772525 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவரிடம் CID வாக்குமூலம்!

Share

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு இருக்கும் இடத்தை சிரச தொலைக்காட்சி தொடர்ந்து கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை சசி ராஜமகேந்திரனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஜூலை 09 ஆம் திகதி இரண்டு தடவைகள் சிரச அலைவரிசையுடன் தொடர்பு கொண்டு தனது வீடு இருக்கும் இடத்தை வெளியிட வேண்டாம் என கோரியதாக குறிப்பிடப்படுகின்றது. சசி ராஜமகேந்திரன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதோடு, சிரச அலைவரிசையின் மேலும் பல தலைவர்களும் வாக்குமூலங்களைப் பெற அழைக்கப்படவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...