298821600 6336370659723810 2588451440648772525 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவரிடம் CID வாக்குமூலம்!

Share

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு இருக்கும் இடத்தை சிரச தொலைக்காட்சி தொடர்ந்து கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை சசி ராஜமகேந்திரனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஜூலை 09 ஆம் திகதி இரண்டு தடவைகள் சிரச அலைவரிசையுடன் தொடர்பு கொண்டு தனது வீடு இருக்கும் இடத்தை வெளியிட வேண்டாம் என கோரியதாக குறிப்பிடப்படுகின்றது. சசி ராஜமகேந்திரன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதோடு, சிரச அலைவரிசையின் மேலும் பல தலைவர்களும் வாக்குமூலங்களைப் பெற அழைக்கப்படவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...