20 20
இலங்கைசெய்திகள்

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

Share

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் சீன ஜனாதிபதியின் வாழ்த்து குறிப்பில், சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள். இருநாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.

இதன்மூலம் இருநாடுகளும் நட்புறவுமிக்க சகவாழ்வு வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும்.

நான் இலங்கை சீன உறவுகளிற்கு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன். உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விடயங்கள சாதிப்பதற்கும்நான் ஆர்வமாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
550001 uranium found in breast milk
செய்திகள்இலங்கை

பீகார் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: குழந்தைகளுக்கு சுகாதார அபாயம் குறித்த ஆய்வு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம்...

articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
செய்திகள்இலங்கை

360 மில்லியனுக்கு 3 மில்லியன் விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

மனிதப் பயன்பாட்டிற்காக ரூபாய் 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5...

images 7
செய்திகள்இலங்கை

தேசிய பயிற்சி ஆணைக்குழுக்களில் தமிழ் மாணவர்களைத் தக்கவைக்க: அடுத்த வருடம் முதல் தமிழ் மொழி ஆசிரியர்கள் நியமனம்!

தேசியப் பயிற்சி மற்றும் தொழில்துறைப் பயிற்சி ஆணைக்குழுக்களில் (National Training and Industrial Training Commissions)...

27f94221 21fe 4856 affc d708e18f170d 1
செய்திகள்இலங்கை

கதிர்காமம் அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவித்த இளைஞன் கைது!

கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும்...