21 15
இலங்கைசெய்திகள்

பதவி ஏற்றபின்னர் அநுர வழங்கிய முதல் நியமனம்

Share

பதவி ஏற்றபின்னர் அநுர வழங்கிய முதல் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நந்திக சனத் குமாநாயக்க அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவி ஏற்ற பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

Share
தொடர்புடையது
dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...

குருவிட்ட
இலங்கை

குருவிட்ட, பல்லன்சேன சிறைச்சாலைகளின் அமைதியின்மை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள்.

இன்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து...