images 7
செய்திகள்இலங்கை

தேசிய பயிற்சி ஆணைக்குழுக்களில் தமிழ் மாணவர்களைத் தக்கவைக்க: அடுத்த வருடம் முதல் தமிழ் மொழி ஆசிரியர்கள் நியமனம்!

Share

தேசியப் பயிற்சி மற்றும் தொழில்துறைப் பயிற்சி ஆணைக்குழுக்களில் (National Training and Industrial Training Commissions) சிங்கள மொழியில் மாத்திரமே கற்பிக்கப்படுவதால், தமிழ் மொழிமூல மாணவர்கள் அவற்றிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழ் மாணவர்கள் தொழிற்கல்வியில் இருந்து விலகுவதைத் தடுக்க, தமிழ் மொழிமூலக் கற்பித்தல் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தேசியப் பயிற்சி மற்றும் தொழில்துறைப் பயிற்சி ஆணைக்குழுக்களுக்கு அடுத்த வருடம் முதல் தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, தமிழ் மாணவர்கள் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் முழுமையாகப் பங்கேற்கவும், தங்களது வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...