இலங்கை வருகிறது சீன டீசல்!

image a877dfa6f2

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும்.

சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’ கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.

இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version