18 22
இலங்கைசெய்திகள்

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

Share

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், முறையான விஜயத்தின் அடிப்படையில் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளன

ஹெ பெய் ( HE FEI), இ வுஸிசான்;(WUZHISHAN) மற்றும் க்ய்லியான்சான்(QILIANSHAN) ஆகிய கப்பல்களே கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன.

HE FEI என்பது 144.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரக் கப்பலாகும். இது 267 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய இரண்டும் 210-மீட்டர் நீளமுள்ள தரையிறங்கும் தளத்தை கொண்டுள்ளன.

அத்துடன் முறையே 872 மற்றும் 334 பணியாளர்களை கொண்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படவுள்ளன

இதேவேளை இன்று இந்தியாவின் ஐஎன்எஸ் மும்பாய் என்ற போர்க்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...