Rice
இலங்கைஅரசியல்செய்திகள்

அரிசியை இறக்குமதி செய்யப்போகும் சீனா!

Share

இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை  இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் சீனாவுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இறப்பர் -அரிசி வர்த்தக உடன்படிக்கை 2022 ஆம் ஆண்டில் 70 வருடங்களை பூர்த்தி செய்வதால் ஒரு மில்லியன் மெற்றித்தொன் அரிசியை இலவசமாக வழங்குமாறு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கையை நிதியமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சீனத் தூதுவர் கோரியிருந்தார். அதற்கமைவாக வெளிவிவகார அமைச்சு கடிதம் மூலம் சீனத் தூதரகத்திடம் கோரிக்கையை சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...