rtjy 296 scaled
இலங்கைசெய்திகள்

கோழி இறைச்சி விலை தொடர்பில் எச்சரிக்கை

Share

கோழி இறைச்சி விலை தொடர்பில் எச்சரிக்கை

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால் கோழி இறைச்சியையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1300 முதல் 1500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக கோழி இறைச்சி கொள்வனவு செய்வதனை நுகர்வோர் குறைத்துக் கொண்டுள்ளனர்.

எனது கணக்கின்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபா வரைக்கும் விற்பனை செய்ய முடியும்.

எனவே கோழி இறைச்சி விற்பனையாளர்கள் பிரச்சினையை சுமூகமாக முடிக்க விரும்பாவிட்டால் கோழி இறைச்சியையும் இறக்குமதி செய்ய நேரிடும். நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இடமளிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சந்தையில் தற்பொழுது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 முதல் 1400 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...