rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

Share

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு தொடர்பு இருக்க வேண்டும் என நான் பல வருடங்களாக கருதி வந்துள்ளேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் கருதிவந்துள்ளேன்.

இது அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான படமாகும் என என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...