liquore3 1586427072
இலங்கைசெய்திகள்

மதுபான விநியோக நடைமுறையில் மாற்றம்!

Share

தேசிய ரீதியாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கலால் திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தி வருவதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளாா்.

அவ்வாறு பாதுகாப்பு ஸ்டிக்கா் கொண்ட மதுபானம் சந்தைக்கு வருவதற்கு முன்னா் சந்தையில் இருக்கும் மதுபான தொகை முடிவடையவுள்ளதாகவும் அதற்காக மூன்று மாத காலம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

ஏப்ரல் முதலாம் திகதியாகும்போது, சந்தைகளிலுள்ள அனைத்து மதுபான கையிருப்புகளிலும் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பொருத்தப்படும். தற்போதவரையில் ஒரு வருடமாக இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களில் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் உள்ளூர் சந்தைக்குள் நுழைவதை தடுப்பதற்காகவும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் உள்ளூர் சந்தைக்குள் வருவதை தடுக்கவும் இந்த பாதுகாப்பான முத்திரைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினாா்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...