பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது என கல்வி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இவ்வாறு மாற்றங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரம் மற்றும் சாதாரண தர வினாத்தாள்களிலேயே மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளன என கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சுற்றறிக்கை எதிர்வரும் நாள்களில் வெளியாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment