3 1
இலங்கைசெய்திகள்

அனுமதியின்றி பெயரை பயன்படுத்துவதாக சந்திரிக்கா குற்றச்சாட்டு

Share

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் கதிரை சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமது புகைப்படத்தை துண்டுப் பிரசூரங்களில் அனுமதியின்றி பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

லசந்த அலகியவன்ன மற்றும் சரண குணவர்தன ஆகியோரின் புகைப்படங்களுடன் தனது புகைப்படத்தையும் பிரசார நோக்கில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது பெயரையோ புகைப்படங்களையோ எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என கதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தனது அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இது தொடர்பிலான கடிதமொன்றையும் சந்திரிக்கா வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...