3 1
இலங்கைசெய்திகள்

அனுமதியின்றி பெயரை பயன்படுத்துவதாக சந்திரிக்கா குற்றச்சாட்டு

Share

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் கதிரை சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமது புகைப்படத்தை துண்டுப் பிரசூரங்களில் அனுமதியின்றி பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

லசந்த அலகியவன்ன மற்றும் சரண குணவர்தன ஆகியோரின் புகைப்படங்களுடன் தனது புகைப்படத்தையும் பிரசார நோக்கில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது பெயரையோ புகைப்படங்களையோ எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என கதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தனது அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இது தொடர்பிலான கடிதமொன்றையும் சந்திரிக்கா வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....