20220625 130651 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு நீதி அமைச்சரால் சான்றிதழ்!

Share

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச இரண்டாம் மொழி கல்வியின் அவசியம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தெரிந்திருப்பது அவசியம் மற்றும் இனங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதற்காக மொழிகள் அவசியமாகின்றன ஆகிய கருத்துகளை முன்வைத்தார்.

குறித்த இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் இராமச்சந்திரன் உரையாற்றும்போது தற்போது நாட்டில் உள்ள நேர்மையான புத்திஜீவிகளில் ஒருவர் விஜயதாச ராஜபக்ச எனவும் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தற்போது நாட்டில் இருக்கும் பொருத்தமானவர் இவர்தான் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் உதவி அரசாங்க அதிபர் அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...