17 11
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Share

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சட்டவிரோதமான முறையில் பொதுப் பணத்தை வைப்புத் தொகையாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாட்டை தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஆளுநர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் நடத்தப்பட்ட நான்காவது கொள்கை வட்டி விகித மாற்றங்கள் பற்றிய அறிவித்தல் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால், மக்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வட்டி விகிதங்களைக் குறைக்கும் வகையில் வங்கி மற்றும் நிதியை ஒழுங்குபடுத்த மத்திய வங்கி தற்போது தயாராக இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...