சிறில் காமினி
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபையும் ஆதரவு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபை ஆதரவு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கத்தோலிக்க சபையும் இருக்கின்றது என்று மேற்படி சபையின் ஊடகப்பேச்சாளர் வணபிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க சபையும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பின்னணியில் இருக்கின்றது எனவும், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதுவித மதம் சார்ந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க போவதில்லை என்றும் வணபிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

அதேவேளை , உயிர்த்த ஞாயிறு மத அனுட்டானங்களை காலிமுகத்திடல் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்திகளை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...