download 10 1 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

Share

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சத்திர சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணிக்கு கீழ்குறிப்பிடும் வைத்தியசாலைகளுக்கு சமூகந்தருமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கும்  நயினாதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் அனலைதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் எழுவைதீவு  பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் எழுவைதீவு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கும் சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அங்கிருந்து இவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இவர்களை மீள அந்தந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களை இன்று காலை 9 மணிக்கு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் சமூகம் தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...