முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு சுமார் 09 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக விமல் வீரவங்ச உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம்(25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கு தொடர்பான மேலதிக விடயங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version