Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Share

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு சுமார் 09 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக விமல் வீரவங்ச உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம்(25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கு தொடர்பான மேலதிக விடயங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...