Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Share

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு சுமார் 09 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக விமல் வீரவங்ச உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம்(25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கு தொடர்பான மேலதிக விடயங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...