rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Share

காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

களுத்துறையில் லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை – மொரகஹஹேன, ஹொரகஸ் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்தவர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த அதிகாரி கல்பத்த பயகம பகுதியைச் சேர்ந்த சந்துன் ஜயசிங்க என்ற 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நிறுவன ரீதியான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திருப்பியபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...