rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Share

காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

களுத்துறையில் லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை – மொரகஹஹேன, ஹொரகஸ் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்தவர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த அதிகாரி கல்பத்த பயகம பகுதியைச் சேர்ந்த சந்துன் ஜயசிங்க என்ற 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நிறுவன ரீதியான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திருப்பியபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...