Dinesh Gunawardena
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜெனிவா ஊடாக எம்மை முடக்க முடியாது!

Share

” தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன. ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி கைகூடாது.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த ஆட்சியை கொண்டுசெல்ல முடியாது என கூறியவர்கள்தான், பொருளாதார விவகாரம் தொடர்பிலும் ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள்கூட முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். எமது அரசாங்கம் ஜனநாயக ஆட்சி முறைமை பின்பற்றுகின்றது. அந்தவகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை – சவாலை எதிர்கொண்டுள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை சர்வதேசம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதக பதில் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவும். எனவே, ஜெனிவா ஊடாக எம்மை முடக்கலாம் என்ற முயற்சி கைகூடாது. ” – எனவும் பிரதமர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...