power cut 2
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

மின்வெட்டிலிருந்து தப்ப முடியாது!

Share

இலங்கைக்கு எவ்வளவு அந்நியச் செலாவணி கிடைத்தாலும் இந்த வருடம் மின்வெட்டிலிருந்து எம்மால் தப்ப முடியாது எனவும் நாட்டின் மின்சார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும் எரிசக்தி துறை நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேசிய மின் உற்பத்தி நிலையத்துடன் புதிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் சேர்க்கப்படவில்லை.

சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது என கலாநிதி சியம்பலாபிட்டிய, சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவைப்பட்டால் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

சரியான தீர்மானங்களை இன்று அமுல்படுத்தினாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு 2026 ஆண்டளவிலேயே தீர்வு கிடைக்குமென கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...