6 49
இலங்கைசெய்திகள்

உப்புல் தரங்க மீதான பிடியாணை உத்தரவை இரத்துச் செய்த நீதிமன்றம்

Share

உப்புல் தரங்க மீதான பிடியாணை உத்தரவை இரத்துச் செய்த நீதிமன்றம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவின் தலைவர் உப்புல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்களை கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி, சட்டமா அதிபரால் தொடரப்பட்ட ஆட்ட நிர்ணய வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக, உப்புல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் ;நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் உப்புல் தரங்க நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நேரில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது மனுதாரர் உபுல் தரங்க சார்பில், சட்டத்தரணி நிசான் சிட்னி பிரேமதிரத்ன, தமது கட்சிக்காரர் குறித்த சாட்சிய விடயத்தில் கவனக்குறைவாகச் செயல்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன் 2024 அக்டோபர் 8ஆம் திகதியன்று விசாரணையைத் தவிர்ப்பதற்கு மனுதாரருக்கு வேண்டுமென்றே எந்த காரணம் எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் உப்புல் தரங்க 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி மாத்தளை மேல்நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வருவார் என உறுதிமொழியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்தே மேன்முறையீட்டு நீதிமன்றம் உப்புல் தரங்கவின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச்செய்தது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...