இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு

24 6630692460c33

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கனடா (Canada) – பிராம்ப்டனில் உள்ள இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனை குறித்து, வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் மின்னஞ்சல் கேள்விக்கே கனேடிய உயர்ஸ்தானிகரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

முன்னதாக, கனேடிய நகரமான பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்தே கனேடிய உயர்ஸ்தானிகரகத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனடாவின் கூட்டாட்சி அமைப்பின் கீழ், மாகாண மற்றும் நகராட்சி அரசாங்கங்கள், குறிப்பிட்ட அதிகார வரம்பைக் கொண்ட மத்திய அரசிடமிருந்து சுயாதீனமாக செயற்படுவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம், வெளிநாட்டுக்கு ஊடகத்துக்கான தமது மின்னஞ்சல் பதிலில் தெரிவித்துள்ளது.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு இலங்கை அதிகாரிகளால் இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதன் பின்னரே பிரம்டனில் நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.

Exit mobile version