24 6630692460c33
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு

Share

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கனடா (Canada) – பிராம்ப்டனில் உள்ள இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனை குறித்து, வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் மின்னஞ்சல் கேள்விக்கே கனேடிய உயர்ஸ்தானிகரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

முன்னதாக, கனேடிய நகரமான பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்தே கனேடிய உயர்ஸ்தானிகரகத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனடாவின் கூட்டாட்சி அமைப்பின் கீழ், மாகாண மற்றும் நகராட்சி அரசாங்கங்கள், குறிப்பிட்ட அதிகார வரம்பைக் கொண்ட மத்திய அரசிடமிருந்து சுயாதீனமாக செயற்படுவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம், வெளிநாட்டுக்கு ஊடகத்துக்கான தமது மின்னஞ்சல் பதிலில் தெரிவித்துள்ளது.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு இலங்கை அதிகாரிகளால் இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதன் பின்னரே பிரம்டனில் நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...