24 66306e7ed48b9
இலங்கைசெய்திகள்

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

Share

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தேசிய தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், கர்தினால் சேவை நீடிப்பு கோரியதாக கூறி அரசாங்க அமைச்சர் ஒருவரினால் நாடாளுமன்றத்தில் தவறான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், கர்தினால் சேவை நீடிப்பை கோரவில்லை என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக கர்தினால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வத்திக்கானுக்கு அறிவித்துவிட்டார்.

எனினும், கர்தினால் இன்னும் பணிபுரிய முடியும் என்பதால் அவரை பணியை தொடருமாறு பாப்பரசர் வேண்டுகோள் விடுத்ததாக தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் கர்தினாலை கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...