tamilni 215 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பில் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்யவதாகவும் சீனியை மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பணம் வழங்குமாறு கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு கும்பல் ஒன்று வர்த்தகர்களுக்கு அழைப்பு எடுத்து பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதைவேளை சீனியின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு சீனி விற்பனை செய்த 300 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கு தொடரப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...