இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறத்தில் விலை உயர்வும், கட்டண அதிகரிப்பும் ஓய்ந்தபாடில்லை.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆரம்ப பஸ் கட்டணமாக 27 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆரம்ப கட்டணமாக 23 ரூபாவே பெறப்பட்டுவந்தது.
தனியார் மற்றும் இபோச என பஸ்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பஸ் கட்டணமும் எகிறியுள்ளது.
அத்துடன், ஆட்டோ கட்டணம் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்படவுள்ளது.
#SriLankaNews