rtjy 266 scaled
இலங்கைசெய்திகள்

பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

Share

பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

களுத்துறை – வஸ்காடுவவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(29.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்ல பயணத்தை மேற்கொண்டபோதே பேருந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அளுத்கமவிலிருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், தொடருந்தும் சேதமடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விபத்து காரணமாக கடலோர தொடருந்து மார்க்கத்தில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...