அரசியல்
களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான உயிரிழந்த மாணவியின் 19 வயதுடைய நண்பர் மற்றும் அவரது காதலன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாகொட பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் 06.05.2023 அன்று பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த நிலையில், பின்னர் மாடியிலிருந்து குதித்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இளம் யுவதியை பார்க்க சென்ற அதிகாரிக்கு அதிர்ச்சி - tamilnaadi.com
Pingback: இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை - tamilnaadi.com